காட்டுக்குள் செல்லும் ஐந்து பேர் பாலசரவணனின் எச்சரிக்கையையும் மீறி, உள்ளே சொல்லும் போது கதாபாத்திரங்களிடம் இருக்கும் பதற்றமும், பயமும் படம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் வகையில், திகில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் இறுதியில் அத்தனைக்கும் பின்னணியாக சொல்லப்படும் திருப்புமுனை, யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும் : அரண்மனை காடு?’ பேச்சி வாழும் வீடு என ‘அரண்மனை 4 ஐ மிஞ்சியது இந்த அரண்மனை காடு?’
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி பறக்கிறது. அதிலும் பேச்சியின் ஆட்டம் ஆரம்பித்ததும், காடு பற்றி எரிகிறது. இரவு இல்லாமல் பேய் படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்ததற்கே அவர்களுக்கு சல்யூட் அடிக்கலாம். பகலில் பார்வையாளர்களை திகில் அடைய வேண்டும் என்று திரைப்படங்கள், எப்போதும் சீசன் திரைப்படங்களாக தான் திரைக்கு வரும். ஒரு அருந்ததி வெற்றி பெறும் போது, பல அருந்ததிகள் வருவார்கள். ஒரு முனி வெற்றி பெறும் போது, பல முனியாண்டிகள் வருவார்கள். இது அரண்மனை காலம். சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ மெகா வெற்றி பெற்று, மீண்டும் ஹாரர் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. அந்த சமயத்தில் வெளியாகியிருக்கும் படம் “பேச்சி
சரி வாங்க கதையை பார்க்கலாம்
காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் கொல்லிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் டிரக்கிங் செல்கிறார்கள். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் வழிகாட்டுவதற்காக அவர்களுடன் செல்கிறார். அவர்கள் செல்லும் வழியில் “இது தடை செய்யப்பட்ட பகுதி” என்ற பலகை ஒன்று இருக்கிறது, அதை பார்த்ததும் நண்பர்கள் அந்த பகுதிக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் பாலசரவணன், அது ஆபத்தான இடம் என்று எச்சரிக்கிறார். அவரது எச்சரிக்கையையும் மீறி அந்த இடத்திற்குள் நுழையும் நண்பர்கள் எதிர்பார்க்காத பல பயங்கரமான சம்பவங்களை சந்திக்கிறார்கள்.
அந்த பயங்கரம் இதுவரை தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களில் காட்டாத ஒன்று நிச்சயம் இசைக்கும் அந்த ஒளிப்பதிவுக்கும் திரைக்கதைக்கும் ஒரு சல்யூட் அற்புதமாக மக்களை அச்சுறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இந்த பட குழு பணி செய்துள்ளது அதில் வெற்றியும் கண்டு விட்டார்கள் பேச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு
இவர்கள் பயந்து நடுங்க என்ன காரணம் என்று பால சரவணன் சொல்கிறார்
இது பேச்சியின் செயல் என்பதை அறிந்துக்கொண்டு, எஞ்சியிருப்பவர்களையாவது காப்பாற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபடும் பாலசரவணன், அதில் வெற்றி பெற்றாரா?, பேச்சி என்பவர் யார்? என்பதை ரசிகர்கள் அலறும் வகையில் சொல்வதே படத்தின் கதை.
பால சரவணன் நடிப்பு நன்றாக இருக்கிறது அவர் கதை சொல்லும் போது அவர் கண்களிலே அவ்வளவு மிரட்டல் சி பேச்சி அவ்வளவு மிரட்டல்
திகில் படங்கள் என்றாலே முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நடப்பது போல் தான் இருக்கும். ஆனால், முழுக்க முழுக்க பகலில் நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் ரசிகர்களை மிரள வைத்திருக்கும் இந்த பேச்சி நீண்ட வருடங்களுக்குப் பிறகு திகில் பட ரசிகர்களுக்கு ஏற்ற விருந்தாக அமைந்திருக்கிறது.
பல கோடி செலவு செய்து பிரம்மாண்டங்களை காட்டு நடிகைகளின் தொடையும் இடையும் காட்டுவதை விட இப்படி நல்ல கருத்தான கதையை நம்பி படம் எடுத்தால் தமிழ் சினிமா மேலும் உயரும்
படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேரும் தங்களது அச்ச உணர்வை ரசிகர்களிடத்திலும் கடத்தும் விதமாக நடித்திருக்கிறார்கள். அடர்ந்த வனப்பகுதிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அச்சத்தோடு பயணிக்கும் அவர்களது பயணம் ரசிகர்களுக்கு திக்…திக்…அனுபவத்தை கொடுக்கிறது.
காமெடி வேடங்களை கடந்து குணச்சித்திர வேடங்களிலும் தன்னால் முத்திரை பதிக்க முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பாலசரவணன். பழங்குடியினராக எதார்த்தமாக நடித்திருப்பவர், ஆபத்தை நோக்கி பயணிப்பவர்களை தடுத்து நிறுத்த போராடும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும், தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவதற்காக தனது உயிரை அவர் பணயம் வைக்கும் போது, பாலசரவணன் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும், என்று படம் பார்ப்பவர்களை பிரார்த்தனை செய்ய வைக்கிறார். அந்த அளவுக்கு அவரது வெள்ளந்தி நடிப்பும், அவருக்காக காத்திருக்கும் அவரது மகளின் முகமும் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது.
பாலசரவனுக்கு அவரது மகள் கழுத்தில் தாயத்து போட்டு அனுப்பும் போதே தெரிந்து விடுகிறது விபரீதம் நடக்கும் என்று
பேச்சி கதபாத்திரத்தை வடிவமைத்த விதம், அதில் நடித்திருப்பவருக்கான மேக்கப் மற்றும் அந்த கதாபாத்திரத்தை திரையில் காட்டிய விதம் ஆகியவை படத்தை மற்ற திகில் படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது.
கேமராவிலேயே நடந்த விஷயங்களை பார்க்கும் போதும் திகில் ஊட்டுகிறது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது படம் அவ்வளவு விறுவிறுப்பாக போகிறது
ஒளிப்பதிவாளர் பார்த்திபன், கதைக்களத்தை அறிமுகப்படுத்தும் ஆரம்பக் காட்சியிலேயே திரையில் பிரமாண்டத்தை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.
படத்தின் முதல் ஹீரோ என்றால் அது ஒளிப்பதிவு வளர தான் பகலிலே பயமுறுத்த முடியும் என்றால் நிச்சயம் பாராட்டலாம்
அதுவும் தவிர படம் பார்ப்பவர்கள் நிச்சயம் இது எந்த இடம்? என்று கேட்பார்கள், அந்த அளவுக்கு புதிய புதிய லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார். குறிப்பாக பகல் நேரங்களில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகவே பார்வையாளர்களை பயப்பட வைத்திருக்கும் அவரது கேமரா கோணங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
அடுத்து ஒப்பனையாளர் பாராட்டுக்குரியவர் பேச்சியின் மேக்கப் நிச்சயம் குழந்தைகளை பயன்படுத்தும் பெரியவர்களையும் அச்சுறுத்துகிறது.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் போட்டி போட்டு இசையமைத்திருக்கிறார்.
பேச்சியை காட்டும் போதெல்லாம் அந்த இசை பயங்கரமான அச்சுறுத்தலாகவே இருக்கிறது வாழ்த்துக்கள் இசையமைப்பாளரே.
படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் மலைப்பகுதி, மேகக்கூட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு தனது பாடல் மூலம் உயிர் கொடுத்திருப்பவர், பின்னணி இசை மூலம் பார்வையாளர்களின் படபடப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார்.
திகில் படங்கள் என்றாலே பின்பற்றப்படும் வழக்கமான பாணியை தவிர்த்திருக்கும் படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின், பேச்சி என்ற கதாபாத்திரத்தை எந்த அளவுக்கு காண்பித்தால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும், பயமும் இருக்கும் என்பதை சரியாக கணித்து காட்சிகளை வெட்டியிருக்கிறார். அவரது படத்தொகுப்பு பயத்தை ஏற்படுத்துவதோடு, பேச்சி கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடவும் வைக்கிறது.
அதோடு நடிகர் நடிகையர் தேர்வு கச்சிதமாக இருக்கிறது
கலை இயக்குநர் குமார் கங்கப்பன், இவரை பாராட்டியே ஆக வேண்டும் பேச்சு வாழ்ந்த வீட்டை முன்பு எப்படி இருந்தது இப்பொழுது எப்படி அந்த பேய் வீடாக காட்சி தருகிறது என்று அரங்கமைப்பாளர் அற்புதமாக பணிபுரிந்துள்ளார்
பேச்சி கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டவர், ஒலி வடிவமைப்பு என தொழில்நுட்ப ரீதியாக படம் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. பசுமையான அந்தப் பள்ளத்தாக்கில் சாரா கீழே விழுந்து விடுவாரோ என்று எண்ணும் போது பால சரவணன் காப்பாற்றும் இடம் திரைக்கதையில் விறுவிறுப்பு
எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன்.பி, ரசிகர்களின் பல்ஸ் அறிந்து திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ‘ராங் டர்ன்’ போன்ற ஆங்கிலப் படங்களின் பாதிப்பாக இருந்தாலும், அதன் சாயல்கள் தெரியாதவாறு திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பாலச்சந்திரன், நாம் கேள்விப்பட்ட பல பழமையான பேய் மற்றும் அமானுஷ்ய கதைகளை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப கையாண்டு திரையில் திகில் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார்.
நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குனரின் புத்திசாலித்தனமாக திரை க்கதை தான்
குழந்தைகள் அச்சத்தில் பேச்சி வரும் போதெல்லாம் கைகளை முகத்தை கொண்டு மூடிக்கொண்டு பயந்த காட்சிகளை பார்த்தோம் இது நிச்சயமாக ரசிகர்களுக்கு தியேட்டரில் குழந்தைகளோடு செல்பவர்கள் அச்சத்தை ஏற்படுத்தும் பல வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல திகில் ஹாரர் படத்தை பார்த்த அனுபவம்
பேச்சி மிரட்டுகிறாள் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது. காட்டுக்குள் செல்லும் அந்த ஐந்து பேரும் இறந்து போவார்கள் என்பது படம் ஆரம்பித்தவுடன் தெரிந்தாலும் அது எப்படி நடக்கும் என்னவாக இருக்கும் என்ற பதட்டம் தொற்றிக் கொள்கிறது
பேச்சிஇரண்டாம் பாகம் நிச்சயம் வரும் அப்போதும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது